search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்து அமைப்பு"

    • 2 ஆண்டுகளுக்குப் பிறகு விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுநாள் (31-ந் தேதி) கொண்டாடப்படுகிறது.
    • ½ அடி முதல் 10 அடி வரை உயரத்திற்கு விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்படுகிறது. மயில் விநாயகர், அன்ன விநாயகர் உள்பட பல்வேறு வடிவிலான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு

    நாகர்கோவில்:

    இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி விழாவும் ஒன்று. விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கொண்டாடப்படவில்லை. 2 ஆண்டுகளுக்குப் பிறகு விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுநாள் (31-ந் தேதி)கொண்டாடப்படுகிறது.

    இதனால் விநாயகர் சதுர்த்தி விழாவை வெகு விமர்சையாக கொண்டாட இந்து அமைப்புகள் தயாராகி வருகிறது. இந்து முன்னணி, பாரதிய ஜனதா, இந்து மகா சபா, சிவசேனா உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்கு தயாராகி வருகிறார்கள்.குமரி மாவட்டம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் சிலைகளை பிரதிஷ்டை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    நாளை மறுநாள் (31-ந்தேதி) காலையில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. ½ அடி முதல் 10 அடி வரை உயரத்திற்கு விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்படுகிறது. மயில் விநாயகர், அன்ன விநாயகர் உள்பட பல்வேறு வடிவிலான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    முக்கிய இடங்களில் மட்டுமின்றி வீடுகளிலும் விநாயகர் சிலைகளை வைப்பதற்கு இந்து அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ளன. பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகளுக்கு காலை, மாலை இரு வேளைகளிலும் பூஜைகள் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு சிலைகளை 2,3,4-ந் தேதிகளில் ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்கவும் முடிவு செய்துள்ளனர்.

    விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்கு போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். விநாயகர் சிலைகளை ஏற்கனவே பிரதிஷ்டை செய்யப்பட்ட இடங்களில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.பொது மக்களுக்கு இடையூறாக விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யக்கூடாது.

    10 அடிக்கு மேல் உள்ள விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யக்கூடாது. விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும் இடங்கள் எளிதில் தீப்பிடிக்காத வகையில் இருக்க வேண்டும். சிலைகளை கண்காணிக்க கண்காணிப்பு குழு அமைத்திருக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதே போல் சிலைகளை கரைப்பதற்கும் கட்டுப்பாடு கள் விதிக்கப்பட்டுள்ளது. போலீசார் அனுமதித்த வழித்தடத்தில் மட்டுமே சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்ல வேண்டும். ஊர்வலத்தின் போது பிற மனதை புண்படுத்தும் வகையில் கோஷங்கள் எழுப்பக் கூடாது.கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் பயன்படுத்தக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் கன்னியாகுமரி கடற்கரை சொத்தவிளை, சங்குதுறை கடற்கரை உட்பட 10 இடங்களில் சிலைகள் கரைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த 10 இடங்களிலும் மின்விளக்கு வசதி உட்பட அடிப்படை வசதிகளை பேரூராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. விநாயகர் சதுர்த்தியையொட்டி மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    ×